Friday, August 13, 2010

வெயில் குருவிகள்

நீரில் வலை விழுவதைப் போல

 புல்வெளியில் அமர்கின்றன குருவிகள்


சலனங்கள் சப்தங்களால் அறியப்பெறும்

புல்லின் அடியீரத்தில் கிட்டுகின்றன

இரைப் பூச்சிகள்

நகர்ந்தபடி இருக்கிறது வெயிலும்

 நீரில் வலையும்

திரும்பும் நேரம் வந்துவிட்டது

வலைகள் படகிற்கும்

குருவிகள் யாருமற்ற வீட்டின் கூட்டுக்கும்

3 comments:

Jerry Eshananda said...

ரசித்தேன் நேசா,[ஊருக்கு எப்போ வர்றீங்க.]

தேவன் மாயம் said...

வரிகள் நன்று !!

Unknown said...

யாருமற்ற வீட்டின் கூடு ...குருவியின் வீடு ...

Post a Comment