Wednesday, September 15, 2010

நிழல்

தீராத அன்பை எழுதித் தீர்த்து
விட ஆகாசம் அளந்து உதிர்ந்த சிறகு
சிறந்த தேர்வுதான்
கூழாங்கல் மீது நகரும் சிறகின் நீர்நிழல்

7 comments:

மதுரை சரவணன் said...

அசத்தல்... வாழ்த்துக்கள்

Madumitha said...

சிறகு போல்
மெத்தென
பறக்கிறது
கவிதை.

மாதேவி said...

அழகிய சிறகு.

ஹேமா said...

ஆகாயம் தொடும் அன்பை
அளக்கமுடியாதுதான் நேசன்.

Geetha said...

//கூழாங்கல் மீது நகரும் சிறகின் நீர்நிழல் //

வார்த்தைகளை கடக்கும் பொழுது காட்சியும் சேர்ந்தே விரிகிறது அழகாய்.

rajasundararajan said...

நீர்நிழல் = நீர்மை + நிழல் என்றும் பொருள்பெறும். ‘நீர்மை’ எனில் அன்பு, தன்மை, ஒளி என்றிவ்வாறு. அலைப்புற்றுப் பண்பட்ட பாறையின் கூறு, ‘கூழாங்கல்’. //எழுதித் தீர்த்து விட// என்பதில் உள்ள விடுதலைக்கு //உதிர்ந்த இறகு// சிறந்த தேர்வுதான்.

வாழ்க!

நேசமித்ரன் said...

நன்றி சரவணன்
நன்றி மதுமிதா
நன்றி மாதேவி
நன்றி ஹேமா
நன்றி கீதா

ரா.சு அண்ணன் உங்கள் பின்னூட்டம் கவிதைக்கு புதுப் பரிணாமமும் மனசுக்கு ஊக்கமும் தருகிறது

நன்றி

Post a Comment