Thursday, December 30, 2010

சிற்றகல் சுடர்

உன்னொரு நாத்திக தீண்டலில் சுவர் மீதிருக்கும்


கண்ணாடிச் சில்லுகள் கடக்கும் பூனையாய்

அளந்து பதியும் பாதம்

ரோமக் காலிடையே மூச்சு



மூங்கிலின் குருத்துகள் பச்சையம் மாறுகையில்

பாய்மரத்தின் பாய்கள் பருவமெய்துகின்றன

தளும்பும் அலைகள் தெறிப்புகளால் உப்புறைய



மகரந்த முகத்துடன் திரியும் வண்ணத்துப் பூச்சி

பழிக்கிறது சிறகசையாமல் மிதக்கும் பறவையை

1 comment:

இரசிகை said...

THALAIPPU NALLAA PURIYUTHU....:)

Post a Comment