Tuesday, April 12, 2011

கடவுச் சொற்கள்

ரேகையழிந்த கரங்களால்
தொடுதிரையில் தெரியும் பெண்ணை
திறந்து பார்ப்பதால் திருப்தியுறுவதில்லை
நடிகை/கன் நினைந்து மனையாள் பிணைந்து
தோற்கும் உடல்

வேண்டியிருக்கிறது திருடப்பட்ட உள்ளாடைகள்
வேண்டியிருக்கிறது மார்பிங் நிர்வாணங்கள்
வேண்டியிருக்கிறது திரையரங்க இருட்டு
வேண்டியிருக்கிறது நெரிசல் பேருந்துகள்
வேண்டியிருக்கிறது கடவுளர் கொண்டாட்டங்கள்
வேண்டியிருக்கிறது தாய் சாயலில் தாசியர்
வேண்டியிருக்கிறது யாசிக்கும் திருநங்கையர்
வேண்டியிருக்கிறது தற்கொலைத்த புகைப்படங்கள்
வேண்டியிருக்கிறது திசை தப்பிய சிறுமிகள்
வேண்டியிருக்கிறது பரிசோதனைக்கு வரும் பிரேதங்கள்

மற்றும்

சித்திரம் வரைந்த கழிவறைகள்
ஒட்டுக் கேட்க முடிகிற தொலைபேசிகள்
ஒருக்களித்த ஜன்னல்கள்
சித்தரித்துக் கொள்ள ஏதுவாய்
தகப்பனோடேனும் பேசிய மின்னுரையாடல்கள்

இச்சித்தும் அனிச்சையுமாய்

நேர்ந்து விடுகின்றன வல்லாங்கப் படுதல்
நேர்ந்து விடுகின்றன கருக்கலைப்புகள்
நேர்ந்து விடுகின்றன பிரிவறிக்கைகள்
நேர்ந்து விடுகின்றன உந்தப் பட்ட மரணங்கள்

ஒரு போதும் கூடுவதில்லை

மெய்நிகர் மெய்யாகவும்
விந்து கருவாகவும்
ஆதலால்
தம் பிள்ளைளை தமதாகவும்
தாமே தமதாகவும்

சாமர்த்தியமாக எழுதப்பட்ட
கடவுச்சொல்லாய்
எண்களாலும் சொற்களாலும்
ஆன உடலை
எரித்துக் கொள்கிறார்கள்
மிக ரகசியமாக

நைந்த உறை
கிழிந்ததறியாமல் நோய்கண்ட
உடல் கூடும்
நிழலாக

(நன்றிகளுடன் அனானிகளுக்கு ...)

9 comments:

ரோகிணிசிவா said...

damn this world

Unknown said...

பிரமாதம் அண்ணே...

Radha N said...

அருமையான கவிதைகள். கருத்துகள் மிகவும் அடர்​த்தியானதாக காணப்படுகிறது. நன்றி.

Radha N said...

அருமையான கவிதைகள். கருத்துகள் மிகவும் அடர்​த்தியானதாக காணப்படுகிறது. நன்றி.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நடிகை/கன் நினைந்து மனையாள் பிணைந்து
தோற்கும் உடல்//
இது தான் காலத்தின் கொடுமை

ஹேமா said...

வேண்டப்பட்ட விருப்பங்களால் வேண்டத்தகாத வில்லங்கங்கள் !

பா.ராஜாராம் said...

மக்கா, கலக்கியிருக்க!!!! :-)

முரளிநாராயணன் said...

கருத்துகள் அதிகம் நிறைந்த அருமையான கவிதை

இரசிகை said...

...!!!.....

Post a Comment