Sunday, April 24, 2011

தேகம்


ஓவியத் தாள்களை கணப்பு அடுப்பு
தின்னக் கொடுத்தாயிற்று அதிலிருந்து கசியும்
வர்ண வாசனை மரத்துப் போக  புகைத்தபடி

உறை பிரிக்காமல் நடுங்கும் கரத்துடன்
எதிர்வீட்டு இளைஞனுக்கு கொடுத்துவிட்டு
அனுமதியோடு விரல் பதிய அறைந்தேன்
நன்றியும் செத்துப் போக
இராவண வயலின்

காப்பீட்டு பத்திரங்களையும்
கத்தரித்த கூந்தலையும்
நாப்கின்னோடு வீசியாயிற்று

சப்தங்களில் இருந்து தப்பிக்க
எப்போதும் கூடுவதில்லை
நீருள் மூழ்க
அரிந்து வீசிய கருப்பை போலும்

ஏது செய்ய
புணர்ந்த தேகத்தை... ?

3 comments:

நிழல்மொழி said...

the last lines are attractive.nice poem

நேசமித்ரன் said...

நிழல்மொழி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சேது

வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் அன்பும்

இரசிகை said...

PURIYALE.........YENAKKU.

Post a Comment