Tuesday, November 1, 2011

ஞாபகம் என்பது நத்தையின் ஓடு

தனதன்பை பகடி செய்தவர்களிடம் 
தரவும் புத்தனிடம் 
ஒரு புன்னகையே இருந்தது. - Siddharth Venkatesan 


ஞாபகம் என்பது நத்தையின் ஓடு 
துகிலுரித்து கொண்டிருக்கும் 
சர்ப்பத்தை கடக்கும் வரை 

மீனுண்ணும் தாய்மீனின்
முட்டைக்குள் மீண்டும் கருவாகுமோ
முன் கொண்ட மகவு 

பொற்கோழியோ
நற்காகமோ 
அடைகாக்க மட்டும் 
அறிந்தவை பறவைகள் 

லோகிதாசனின் பிணக் கூலியாய் 
அன்பு
காணப் பெறும் கண் சார்ந்து 

தனதன்பை பகடி செய்தவர்களிடம்
தரவும் புத்தனிடம் 
ஒரு புன்னகையே இருந்தது

5 comments:

Rathnavel Natarajan said...

அழகிய கவிதை.
வாழ்த்துக்கள்.

J.P Josephine Baba said...

மகத்தான கருத்தாக்கம்!

ஹேமா said...

அத்தனை உவமைகளும் அன்பையே சொல்லி நிற்கின்றன.அன்பின் பலமே அன்புதான் !

sakthi said...

அன்பு தானே எல்லாம்
நல்லா இருக்குண்ணா :))
கடைசி வரிகள் வெகு அழகு

Anonymous said...

||பொற்கோழியோ
நற்காகமோ
அடைகாக்க மட்டும்
அறிந்தவை பறவைகள் || arumai.

Post a Comment