Saturday, September 17, 2011

நான் பிணவறைக் காப்பாளன்



நானொரு பிணவறைக் காவலன்
தனித்திருக்கும் நேரமெல்லாம் காமுற்று இருப்பேன்
தற்கொலை பெண்கள்,நடிகைகள் பிரேதம்
சாலையோரப் பிணங்கள், காவல் அறை மரணங்கள்
தீக்குளித்த உடல்கள்
உயிர் பிரிந்திருக்கும் வழிகள் ,வலிகள் ,உறைந்த புன்னகைகள்
தூக்கிலிட்ட உடல்களில் இருந்து வழிந்திருக்கும் விந்து
பெண்களுக்குள் உறைந்த விந்து
சீழ் நுதல் நாற்றம் நரை
திறந்த விழிகள் மடங்காத விரல்கள்
வளரும் நகம் வளரும் மயிர்
புணர்ச்சி கீறல் காயம் மாயம்
காசு மாசு லஞ்சம்
ரச்புடின் பிரகாஷ்
கர்ப்பவதி கைம்பெண்
நீரால் காரால்
ஊழி மூளி
நான் பிணவறைக் காவலன்

பிணங்களே இல்லாத நாளில்
நான் தற்கொலை செய்து கொள்ளக் கூடும்
முன்குறிப்புகளோடு

Friday, September 9, 2011

சல்லடைநிழல்

எவள் விட்டுச் சென்ற கொலுசின்
ஞாபகத்தில் நுரை கோர்த்திருக்கிறது
நாணல் நதிக்கரை

முகம் பொத்திய எந்த முந்தானையின்
வாசத்திற்கு தரை தடவிக் கொண்டிருக்கிறது
இக்கிளையின் சல்லடைநிழல்

எந்த உதட்டுக்கான முத்தத்தை
நீர்தளம் தொட்டு காற்றில் பறக்க
விடுகிறது இம்மீன்

யார் சாம்பலை கரைத்து விட்டு
எலும்பை நழுவ விட்ட இப்பாண்டத்தின் சில்லில்
வந்தமர்கிறது இந்த தட்டான்