காதுகளில் எலும்பு கூடாத
மழலை ஒன்றின் கபாலத்தை
அணிந்திருந்தாள்
அவள் பாதத்தில் நூற்றாண்டு காலம்
ஒரு கால் பாரம் தாங்கி கிடக்கிறேன்
கருணை கூர்ந்து என்னை தின்னக் கேட்டாள்
பெரு மகிழ்வுடன் ஏந்தினேன்
உப்பு தீர்ந்த இருதயம் முதலில் என்றேன்
நெஞ்சுக்கூடு விலக்கி விரல் செருகியவள்
அறைந்தாள் காணீர்
அவள் பெருந்தனத்தில் பெருகியது உதிரம்
பாதி கல்லான மரத்திலிருந்து மேலெழும் பறவைகள்
அவள் ரோமக் கால்கள்
காதலையுணர் உன் கர்ப்பப்பை
என் புறம் நாரி
Thursday, December 30, 2010
சிற்றகல் சுடர்
உன்னொரு நாத்திக தீண்டலில் சுவர் மீதிருக்கும்
கண்ணாடிச் சில்லுகள் கடக்கும் பூனையாய்
அளந்து பதியும் பாதம்
ரோமக் காலிடையே மூச்சு
மூங்கிலின் குருத்துகள் பச்சையம் மாறுகையில்
பாய்மரத்தின் பாய்கள் பருவமெய்துகின்றன
தளும்பும் அலைகள் தெறிப்புகளால் உப்புறைய
மகரந்த முகத்துடன் திரியும் வண்ணத்துப் பூச்சி
பழிக்கிறது சிறகசையாமல் மிதக்கும் பறவையை
கண்ணாடிச் சில்லுகள் கடக்கும் பூனையாய்
அளந்து பதியும் பாதம்
ரோமக் காலிடையே மூச்சு
மூங்கிலின் குருத்துகள் பச்சையம் மாறுகையில்
பாய்மரத்தின் பாய்கள் பருவமெய்துகின்றன
தளும்பும் அலைகள் தெறிப்புகளால் உப்புறைய
மகரந்த முகத்துடன் திரியும் வண்ணத்துப் பூச்சி
பழிக்கிறது சிறகசையாமல் மிதக்கும் பறவையை
காற்றும் சப்தமும்
வேர்கள் நீருறுஞ்சும்
மௌனக் கிசுகிசுப்பை
மழையருந்திப் பறவைகள்
சப்தம் பெயர்த்து இலக்கணம்
இயம்பின
மரங்கொத்திப் பறவைகள்
விரும்பித் துயிலும் மரம்
மீன் கொத்திகளின் கனவிலிருந்தது
ஏந்திய கரங்களுடன்
மாங்குரோவ் காடுகள்
பறவைகள் கண்டம் கடக்க
விண்ணெழும்பியதும்
அலை சப்தம் சுருதிப் பிசகாமல்
ஒரு நரைத்த இலை உதிர்ந்து மிதக்கிறது
பறவைகளுக்கு மரமும்
மரங்களுக்குப் பறவையும்
காற்றும் சப்தமும்
மௌனக் கிசுகிசுப்பை
மழையருந்திப் பறவைகள்
சப்தம் பெயர்த்து இலக்கணம்
இயம்பின
மரங்கொத்திப் பறவைகள்
விரும்பித் துயிலும் மரம்
மீன் கொத்திகளின் கனவிலிருந்தது
ஏந்திய கரங்களுடன்
மாங்குரோவ் காடுகள்
பறவைகள் கண்டம் கடக்க
விண்ணெழும்பியதும்
அலை சப்தம் சுருதிப் பிசகாமல்
ஒரு நரைத்த இலை உதிர்ந்து மிதக்கிறது
பறவைகளுக்கு மரமும்
மரங்களுக்குப் பறவையும்
காற்றும் சப்தமும்
Subscribe to:
Posts (Atom)