Thursday, December 30, 2010

காற்றும் சப்தமும்

வேர்கள் நீருறுஞ்சும்


மௌனக் கிசுகிசுப்பை

மழையருந்திப் பறவைகள்

சப்தம் பெயர்த்து இலக்கணம்

இயம்பின



மரங்கொத்திப் பறவைகள்

விரும்பித் துயிலும் மரம்

மீன் கொத்திகளின் கனவிலிருந்தது

ஏந்திய கரங்களுடன்



மாங்குரோவ் காடுகள்

பறவைகள் கண்டம் கடக்க

விண்ணெழும்பியதும்

அலை சப்தம் சுருதிப் பிசகாமல்

ஒரு நரைத்த இலை உதிர்ந்து மிதக்கிறது



பறவைகளுக்கு மரமும்

மரங்களுக்குப் பறவையும்

காற்றும் சப்தமும்

1 comment:

இரசிகை said...

வேர்கள் நீருறுஞ்சும்


மௌனக் கிசுகிசுப்பை

மழையருந்திப் பறவைகள்

சப்தம் பெயர்த்து இலக்கணம்

இயம்பின


WOW......:)

Post a Comment