வேர்கள் நீருறுஞ்சும்
மௌனக் கிசுகிசுப்பை
மழையருந்திப் பறவைகள்
சப்தம் பெயர்த்து இலக்கணம்
இயம்பின
மரங்கொத்திப் பறவைகள்
விரும்பித் துயிலும் மரம்
மீன் கொத்திகளின் கனவிலிருந்தது
ஏந்திய கரங்களுடன்
மாங்குரோவ் காடுகள்
பறவைகள் கண்டம் கடக்க
விண்ணெழும்பியதும்
அலை சப்தம் சுருதிப் பிசகாமல்
ஒரு நரைத்த இலை உதிர்ந்து மிதக்கிறது
பறவைகளுக்கு மரமும்
மரங்களுக்குப் பறவையும்
காற்றும் சப்தமும்
1 comment:
வேர்கள் நீருறுஞ்சும்
மௌனக் கிசுகிசுப்பை
மழையருந்திப் பறவைகள்
சப்தம் பெயர்த்து இலக்கணம்
இயம்பின
WOW......:)
Post a Comment