உன்னொரு நாத்திக தீண்டலில் சுவர் மீதிருக்கும்
கண்ணாடிச் சில்லுகள் கடக்கும் பூனையாய்
அளந்து பதியும் பாதம்
ரோமக் காலிடையே மூச்சு
மூங்கிலின் குருத்துகள் பச்சையம் மாறுகையில்
பாய்மரத்தின் பாய்கள் பருவமெய்துகின்றன
தளும்பும் அலைகள் தெறிப்புகளால் உப்புறைய
மகரந்த முகத்துடன் திரியும் வண்ணத்துப் பூச்சி
பழிக்கிறது சிறகசையாமல் மிதக்கும் பறவையை
1 comment:
THALAIPPU NALLAA PURIYUTHU....:)
Post a Comment