குற்றேவல் சேடியாய்
வந்து போனது மழை
மரத்தின் நிழல்வெளி செருப்பும்
நனையாமல்
ஊடல் மனைவியின்
கோணல்ப் பிறை முதுகை தீண்ட நீட்டி
திரும்பிய விரல்களின்
தயக்கத்துடன்
மின் விசிறி நாவு மேவிய தூசாய்
விரிசிறகு மட்டும் நிறம் அடர்ந்த பறவைகள்
எடுத்து விட்ட விரலை மீண்டும் வைத்துக்
கொள்ளும் தூக்கக் குழந்தையாய்
இரண்டு நாள் மட்டும் தள்ளிப் போன
சந்தோஷம்
படம் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்து கூரை ஓவியம்
5 comments:
நல்ல கவிதை.
மடவார் வளாகம் சென்று பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
அற்புதமான கவிதை இது... நேசன்... அழகுணர்ச்சியும்...கற்பனையும்... செம்புல பெயல் நீர்...
இரத்னவேல் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ராகவன் மிக்க நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்
'ஊமை வெயில்' உரைக்கும் இல்லையா?
உரைக்கிறது.
உங்களுக்கும் உரைத்துத்தானோ என்னவோ எங்களுக்கும் புரிகிறாற்போல இறக்கி இருக்கிறீர்கள்!
PIDICHURUKKU..........
Post a Comment